இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஒய்ட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு வெற்றியை கோட்டை விட்டது. ஏனெனில் அதன் பின் இந்தியாவை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அந்த அணி 2ஆவது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 79 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

Advertisement

அதை எளிதாக சேஸிங் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தென் ஆப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக இத்தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டீன் எல்கர் முதல் போட்டியில் 185 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

மேலும் 2ஆவது போட்டியில் டெம்பா பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்கு போராடியும் வெற்றி காண முடியவில்லை. ஆனால் புஜாராவை போல சற்று மெதுவாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்து முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கேரியரை அர்ப்பணித்த அவர் 5,000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.

அத்துடன் கேப்டனாக 2021/22இல் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்து அவர் தென் ஆப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்கு போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார்.

அதே போல ஒட்டுமொத்த வீரர்களின் கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சியை அன்பு பரிசாக கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 இந்திய ஜாம்பவான் வீரர்கள் தென் ஆப்பிரிக்க கேப்டனுக்கு பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News