இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நேற்று ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேர்வுக்குழு அறிவித்த இந்த அணியில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

Advertisement

இவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் வீரர்கள் இருந்த காரணத்தினால் விளையாடுவதற்கு இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் காரணமாக இவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, இவர் அடுத்து மெயின் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வீரராக மாறினார்.

Advertisement

தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காகவும், மேலும் இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்நாட்டு முதல் தர போட்டிகளில் 46 ரன் சராசரி வைத்திருக்கும் இவருக்கு, தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா, “அவர் எங்கள் அணியின் முக்கியமான வீரர். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை உருவாக்குவது பெருமையாக இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இப்படி வீரர்களை இந்திய அணிக்கு தயாரித்திருக்கிறோம்.

இதில் துருவ் ஜுரல் ஒரு புதிய வீரராக சேர்ந்து இருக்கிறார். அவர் மிகவும் நல்ல வீரர் ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். அழுத்தத்தை மிகவும் நன்றாக புரிந்து கொள்வார். கடினமான நேரங்களில் எங்களுக்கு மிக முக்கியமான ரன்களை எடுத்தவர். சந்தேகமில்லாமல் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் அவர் முழுமையான ஒரு மேட்ச் வின்னர்” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News