சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மணிப்பால் டைகர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எட்வர்ட்ஸ் - கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கம்பீர் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து எட்வர்ட்ஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சிப்லி 16 ரன்களிலும், பாவெல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின் இணைந்த பீட்டர்சென் - பென் டங்க் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் பென் டங்க் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த பீட்டர்சென் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இஷுரு உதானா தனது பங்கிற்கு 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு சாத்விக் - முகமது கைஃப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கைஃப் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அமித் வெர்மாவும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தர். பின்னர் சாத்விக்குடன் இணைந்த ஏஞ்சலோ பெரேராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் சாத்விக் 33 ரன்களுக்கும், ஏஞ்சலோ பெரேரா 35 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கருணரத்னே - காலின் டி கிராண்ட்ஹோம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதில் கிராண்ட்ஹோம் 38 ரன்களையும், கருணரத்னே 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மணிப்பால் டைகர்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News