ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

Advertisement

இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.  அதன் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்துவருகிறது. 

Advertisement

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் அலோசகராக நியமித்துள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லக்னோ அணி நிர்வாகம் நேற்றையம் தினம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் அந்த அணி நிர்வாகம் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கேல் ராகுலை விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகின. 

மேலும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்குவதுடன், அவரையே அணியின் கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், “நீங்கள் ஒன்று சொல்லுங்கள், எதிர்வரும் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியுமா அல்லது வேறு யாருக்காவது தெரியுமா? இந்த யூகங்கள் அனைத்தும் தேவையில்லாமல் உருவாக்கப்படுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மாவை அணியில் இருந்து விடுவிக்குமா, அல்லது அவர் ஏலத்தில் பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் ஏலத்தில் பங்கேற்றாலும், உங்கள் ஏலத்தொகையின் 50 சதவீதத்தை ஒரு வீரருக்கே செலவழித்தால், மீதமுள்ள 22 வீரர்களை எப்படி நிர்வகிப்பீர்கள்? இந்த வீரர்களை வாங்க ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பம் உள்ளது. 

ஆனால் மற்ற உரிமையாளர்களும் அந்த வீரரை தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆவலுடன் உள்ளனர். ரோஹித் சர்மாவை வாங்க விருப்பமா என்று கேட்டால், நிச்ச்சயம் அவர் சிறந்த வீரர், சிறந்த கேப்டன். ஆனால் ஒரு வீரரை வாங்குவது விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல. நம்மிடம் என்ன இருக்கிறது, லக்னோ அணிக்கு என்ன தேவை என்பதை பொறுத்தே வாங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அந்த சீசன் மிகவும் மோசமானதாக இருந்தது. ஏனெனில் அந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் 7இல் மட்டுமே வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணி நிர்வாகம் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் மொத்த அணியையும் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News