சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த மிலிந்த் குமார்!

Updated: Wed, Sep 25 2024 12:36 IST
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை லீக் 2 கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியில் ஆண்ட்ரிச் கௌஸ், கேப்டன் மொனாங்க் படேல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், சமித் படேல் 48 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய்தேஜா முக்காமல்லா - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். 

இதன்மூலம் அமெரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மிலிந்த் குமார் 155 ரன்களையும், சாய்தேஜா முக்காமல்லா 107 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் ஆசிஃப் கான் 51 ரன்களையும், ராகுல் சோப்ரா 52 ரன்களையும், பசில் ஹமீத் 50 ரன்களையும் சேர்த்தனர். 

ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் சௌரவ் நேத்ரவால்கர், கெஞ்சிகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் அமெரிக்க அணி 136 ரன்கள் வித்தியாஅசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் அமெரிக்க அணி வீரர் மிலிந்த் குமார் 155 ரன்களைக் குவித்ததன் மூலம் சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, 53 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் இன்னிங்சில் 155 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை மிலிந்த் குமார் பெற்றுள்ளார். இதுவரை இந்த வடிவத்தில் விளையாடிய 4773 வீரர்களில் எந்த ஒரு வீரரும் இந்த ஸ்கோரை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 63 முறை வீரர்கள் 150 முதல் 159 ரன்களுக்குள் அவுட் ஆனபோது இது நடந்துள்ளது. ஆனாலும் 155 ரன்களை யாராலும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை