டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்தியாவின் இந்த காம்பினேஷன் சரிவருமா என பல்வேறு விவாதங்களை தொடங்கியுள்ளனர்.

Advertisement

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது சரியான பவுலிங் படை இல்லாதது தான். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் ஜோடி சேர்கின்றனர்.

Advertisement

இந்த பவுலிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் முகமது ஷமி இல்லாதது தான். ஆஸ்திரேலிய களத்தில் அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும். இப்படிபட்ட களத்தில் முகமது ஷமி நன்றாக பந்துவீசுவார். ஆனால் அவர் பேக் அப் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவை 5வது வேகப்பந்துவீச்சாளராக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியா தெரிந்தே தவறு செய்துள்ளதாக மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஆஸ்திரேலிய களத்தில் விளையாடுவதற்கு ஒரு அணியில் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 4 முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொள்வது ரிஸ்க்காகும்.

ஆஸ்திரேலியாவில் ஒரு அணியின் ப்ளேயிங் 11இல் முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் 3 அல்லது 4 பேர் நிச்சயம் தேவை. குறிப்பாக பெர்த் போன்ற மைதானங்களில் வேகப்பந்துவீச்சு தான் எடுபடும். ஆனால் இந்தியவோ தனது ப்ளேயிங் 11ல் ஹர்திக் பாண்ட்யாவை சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் எனத்தெரிகிறது. களத்தின் தன்மை தெரிந்திருந்தாலும் பிசிசிஐ தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறது.

இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற 3 பேரும் 140+ கிமீ வேகத்தில் வீச தடுமாறுவார்கள். ஆனால் அது அவசியம் கிடையாது. அனைவரும் 145+ கிமீ வேகத்தில் வீச வேண்டும் என்பது முக்கியம் அல்ல, அதே சமயம் குறைந்த வேகத்திலும் நல்ல வேரியேஷன்களை காட்டினால் மட்டுமே ஜெயிக்க முடியும்” எனக்கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News