பந்து அளவுக்கு அதிகமாக சுழன்றதை நாங்களும் எதிர்பார்க்கவில்லை - மிட்செல் சாண்ட்னர்!

Updated: Sat, Jan 28 2023 11:40 IST
Mitchell Santner said on the turning pitch, "I think it was a bit of a shock, how much it spun in th (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க பின் ஆலன் 35, டிவோன் கான்வே 52 ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் 59 அரை சதம் அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். கிளென் பிலிப்ஸும் தனது பங்கிற்கு 17 ரன்களை அடித்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை அடித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 47, வாஷிங்டன் சுந்தர் 50 (28), கேப்டன் ஹார்திக் பாண்டியா 21 ஆகியோர் மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தனர். அதேசமயம் டாப் ஆர்டர் பேட்டர்களான ஷுப்மன்ன் கில் 7, இஷான் கிஷன் 4, திரிபாதி போன்றவர்கள் சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணிக் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “நாங்கள் பந்துவீசும்போது, பந்துகள் அளவுக்கு அதிகமாகவே சுழன்றது. இது ஆச்சரியமாக இருந்தது. ஒருநாள் போட்டிகளின்போது, பவர் பிளேவில் அதிக விக்கெட்களை இழந்தோம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகையால், டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் விக்கெட்டை இழக்க கூடாது என முடிவுசெய்தோம். அதேபோல் நடந்ததால்தான் வென்றோம்.

டேரில் மிட்செல் அபாரமாக செயல்பட்டதால்தான் 176 ரன்களை அடிக்க முடிந்தது. இந்த ஸ்கோர் போதுமானது கிடையாது என்பது எங்களுக்கு தெரியும். ஆகையால், பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்த முடிவு செய்தோம். அப்படி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தியதால்தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை