இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் மத்திய பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரண் லால் 44 ரன்களையும், ஷஃபாஸ் அஹ்மத் 37 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மத்திய பிரதேச அணியானது 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 68 ரன்களையும், சுப்ரன்ஷு செனாபதி 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் பெங்கால் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி இப்போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய முகமது ஷமி 38 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, மேலும் இப்போட்டியின் 19ஆவது ஓவரை ஷமி வீசிய நிலையில், முதுகுவலியால் பந்துவீச முடியாமல் தடுமாறினார். 

இதனால் சக அணி வீரர்கள் அவருக்கு உதவினர். இருப்பினும், நல்ல விஷயம் என்னவென்றால், ஷமி இந்த ஓவரை முடித்து, உள்ளே இருந்து எவ்வளவு வலிமையானவர் என்பதைக் காட்டினார். மேலும் அவர் பந்துவீச்சின் போது தடுமாறி கிழே விழுந்தது தான் முதுகுவலிக்கான காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் வலியால் அவதிப்பட்ட நிகழ்வானது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டார்.

பின்னர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இருந்து விலகியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் வங்கதேச தொடர், நியூசிலாந்து தொடர் என தவறவிட்ட முகமது ஷமி அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் தவறவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் தன் அவர் தற்சமயம் தனது காயத்தில் இருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, தற்சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பர் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் இப்படியான சூழலில் அவர் மீண்டு காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தற்போது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ள்து.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News