எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.

Advertisement

அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார்.

இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், 'இது எங்களுக்கு கடினமான தோல்வியாகும். இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம். அதற்குரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கையில் நாங்கள் இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டும். நாங்கள் இந்த தோல்வியை விரைவில் மறந்து அடுத்து வரும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்' என்று தெரிவித்தார்.

Advertisement

இனிவரும் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் பெரும் நெருக்கடிக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News