ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணியில் இணைந்த பிரித்வி ஷா!

Updated: Thu, Feb 01 2024 17:45 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரராக பார்க்கப்பட்டர் பிரித்வி ஷா. இவர் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் கோப்பையையும் வென்று கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக  இளம் வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். மேலும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். 

இந்நிலையில் தான் காயத்தை சந்தித்த பிரித்வி ஷா அதன்பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார். அதன்பின் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட பிரித்வி ஷா தற்போது அணியிலிருந்து முற்றிலுமாக ஓரங்கப்பட்டுள்ளார். எனினும் காயத்திலிருந்து மீண்ட அவர் ஐபிஎல், கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் விளையாடி தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்

ஆனால் கவுண்டி கிரிக்கெட் தொடரின் போது மீண்டும் காயமடைந்த பிரித்வி ஷா அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வரும் பிரித்வி ஷா தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பெங்கால் அணிக்கெதிரான போட்டியில் பிரித்வி ஷா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை