கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!

Updated: Thu, Feb 23 2023 17:41 IST
R Sridhar explains 'blunder' committed by Virat Kohli, Ravi Shastri ahead of 2019 ODI World Cup (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே யான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை இரண்டு அணிகளும் சமீபத்தில் வெளியிட்டன.

வருகின்ற அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. 2011 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை தழுவியது.

2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்த தவறை ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் செய்ய மாட்டார்கள் என தான் கருதுவதாக தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு நான்காம் இடத்தில் ஆடுவதற்கான வீரரை சரியாக தேர்வு செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவி வந்தது. 

அந்த இடத்திற்கு நிறைய வீரர்களை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டு சில போட்டிகளில் நான்காம் இடத்தில் ஆடினார். அதன் பிறகு காயம் காரணமாக அவர் உலக கோப்பையில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் நான்காம் இடத்தில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள ஆர்.ஸ்ரீதர், “2019ஆம் ஆண்டின் உலகக் கோப்பை முன்பாக போதிய கால அவகாசம் இருந்தும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி நான்காம் இடத்தில் நிரந்தரமாக விளையாடுவதற்கு உரிய ஒரு வீரரை தயார் செய்ய தவறி விட்டார்கள் என கூறினார். 2015 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு நான்காண்டுகள் அவகாசம் இருந்தும் ஒரு வீரரை அந்த இடத்தில் விளையாடுவதற்கு நிரந்தரமாக தயார் செய்ய தவறிவிட்டது. 

அந்த இடத்திற்கு பல வீரர்களை முயற்சி செய்தும் யாருக்கும் நீண்ட ஒரு கால அவகாசம் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருக்கிறார், அம்பத்தி ராயுடு, மனிஸ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில போட்டிகளில் அவர்கள் தோல்வியடைந்ததும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அணிக்காக நான்காம் இடத்தில் விளையாடக்கூடிய வீரர் ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் என்பது முதல் 90 சதவீத ஸ்ட்ரைக் கேட்டுடன் விளையாடி இறுதிக் கட்டங்களில் 100 முதல் 120 ஸ்ட்ரைக் ரேட் இருக்கு ஆடக்கூடிய திறமையை பெற்றிருக்க வேண்டும். அம்பத்தி ராயுடு நான்காம் இடத்தில் அதிகமான போட்டிகளில் ஆடி சிறப்பாக செயல்பட்டு வந்தார். உலகக் கோப்பைக்கு முன்பான நியூசிலாந்து தொடர்களில் கூட சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆனாலும் உலகக் கோப்பை காண அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த விஷயத்தில் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்த தவறை இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹுஇத் சர்மா ஆகியோர் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே உலகக்கோப்பையில் விளையாடக்கூடிய 11 வீரர்களையும் அவர்கள் ஆடக்கூடிய பேட்டிங் பொசிஷனையும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முடிவு செய்து தெளிவான திட்டமிடலுடன் களமிறங்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை