இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் நபர் தான் விராட் கோலி. தோனி, சச்சினுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார்.

Advertisement

எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் மூன்று இலக்கம் ரன்களை சிவப்பு நிற பந்தில் தொடவில்லை. அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார். 

Advertisement

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “இந்தத் தொடரில் நான் எந்த பேட்ஸ்மேன்களின் பார்மை பற்றியும் கண்டுகொள்ள போவதில்லை. காரணம் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது. 

எனினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டு மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள்.

இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்து உங்களுக்கு நடந்து கொண்டே இருந்தால் உங்களால் பேட்டிங்கை விளையாடுவது முடியாது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News