India vs England Lord’s Test: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளன. இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும். 

Advertisement

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சர்வதேச டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்காக WTC-யில் அதிக ரன்கள்

அதன்படி இப்போட்டியில் ரிஷப் பந்த் மேற்கொண்டு 122 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ரிஷப் பந்த் 2594 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 

சேவாக்-ரோஹித்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இதுவரை 86 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் அவர் மேலும் ஆறு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் 91 சிக்ஸர்களை அடித்து முதலிடத்திலும், ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Also Read: LIVE Cricket Score

நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் லீஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியுள்ளார். மேலும் பர்மிங்ஹாம் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து மொத்தமாக 85 என்ற சராசரியுடன் 342 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் இதில் அவர் 13 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News