இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

Advertisement

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இதனால் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவின் மீதான எதிர்பார்ப்புகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமைத் திறன்களைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்டு பேசிய அவர், “ரோஹித் சர்மா போட்டியின் போது டாஸில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வதிலும், அணி பேருந்தில் அவரது தொலைபேசி மற்றும் ஐபேட் உள்ளிட்டவற்றை மறந்தாலும், அவர் தனது விளையாட்டை ஒருபோதும் மறக்க மாட்டார்.

அவர் அதில் மிகவும் திறமையானவர் மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். அவர் ஒரு கேப்டனாக திட்டங்களை வகுப்பதில் மிகவும் சிறந்தவர். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பும்ராவின் ஓவரை சீக்கிரமே முடித்தார். அந்த முடிவை நிறைய பேர் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும், ஆனால் அந்த முடிவு எங்களை கடைசி ஓவரில் 16 ரன்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளியது.

களத்தில் அவர் எடுக்கும் சில முடிவுகள், வெளியில் அமர்ந்திருக்கும் ஒரு பயிற்சியாளராக உங்களை ஆச்சரியப்படுத்தும். ஏனெனில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கும் விசயங்களை அவர் களத்தில் செய்துகொண்டிருப்பார். ஒரு பேட்ஸ்மேனாக, அவர் ஒரு அற்புதமான வீரர் என்பது அவரது முதல் தரம். அவர் தனது ஆட்டத்தை நன்றாக புரிந்து கொண்டவர் என்று நினைக்கிறேன்.

அவர் எப்போதும் தெளிவான விளையாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார். ஒரு தலைவராக இருந்தாலும், நீங்கள் முன்னணியில் இருந்து வழிநடத்த வேண்டும். முன்னுதாரணமாக நீங்கள் செயல்பட வேண்டும். மேலும் அவர் கேப்டனாக ஆனதால் அவர் எப்போதும் முன்மாதிரியாக இருந்து வருகிறார். அவர் சக வீரர்களுக்கான கேப்டன். மேலும் அவர் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், அவர்களை முழுமையாக நம்புகிறார்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News