இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி பாரடர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

மறுபுறம் ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றும் தகுதியை இழந்துவிட்டது . மேலும் அந்த அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள மீதி இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆவது வெற்றி பெற வேண்டும். இதற்காக அந்த அணி கடுமையாக போராடும். மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா அணி முனைப்பு காட்டும்.

Advertisement

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நாளை முதல் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமான வாய்ப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கமின்ஸ் தனது தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியா திரும்பி உள்ளதால் அணியின் துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திறமையான வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதது எனக் கூறினார். மேலும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது போட்டி தூங்குவதற்கு முன்பாக தான் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் சில பத்திரிகையாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீசிய அளவிற்கு அக்சர் பட்டியலுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய ரோஹித் சர்மா, “ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இரு முனைகளில் இருந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனால் அவர்கள் இருவரையும் தொடர்ச்சியாக பந்து வீசச் செய்தேன்.

மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் போது யாரேனும் ஒரு பந்துவீச்சாளர் குறைவான அளவுகோர்களை வீசித்தான் ஆக வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியதால் அவர்கள் அதிகமானோர்களை வீசினர். அடுத்த போட்டியில் யார் அதிக ஓவர்களை வீசுவார்கள் என்பது ஆட்டத்தின் போக்கை பொறுத்தே முடிவு செய்யப்படும்.

Advertisement

யார் நன்றாக பதிவு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்களோ அவர்கள் அதிகமான ஓவர்களை வீசுவார்கள். இரண்டு முனைகளிலிருந்தும் வீரர்கள் உங்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் போது அவர்கள் தொடர்ந்து பந்து வீசுவதை தான் ஒரு கேப்டன் ஆக நான் விரும்புவேன்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News