SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?

Updated: Wed, Jul 17 2024 14:44 IST
Image Source: Google

இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று  போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் மூவரும் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினர். 

இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைத் தொடர்து இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியானது எழுந்தது. அதன்படி ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோரது பெயர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இதில் ஹர்திக் பாண்டியாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி அதிகரித்துள்ளது. மேற்கொண்டு டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் ஆகியோரி ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக இலங்கை தொடரில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று கோரியுள்ளதாக பிசிசிஐயுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தங்களது அடுத்த ஒருநாள் தொடரை விளையாட நீண்ட காலம் ஓய்வு கிடைக்கும் என்ற காரணத்தை கூறி கம்பீர் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட விரும்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஒருவேலை ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவரே அணியின் கேப்டனாகவும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மற்ற மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இத்தொடரில் பங்கேற்பார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படாததால் அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை