கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!

Updated: Sat, Jul 02 2022 21:05 IST
Rohit Sharma will play the first T20 against England on July 7th (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கரோனா தொற்று காரணமாக விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்து இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது .

முதல் இன்னிங்ஸில் கூட ரோஹித் சர்மா இல்லாததால் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 98 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . பந்த் , ஜடேஜா ஜோடி இந்திய அணி சரிவிலிருந்து மீட்டது. இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதில் ரோகித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது . ஆனால் கரோனாவில் இருந்து ரோஹித் சர்மா மீண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. ரோஹித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. இதனை அடுத்து ஒரு வார காலம் ஹோட்டலில் தனிமையில் இருந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

இந்த நிலையில் தான் பிசிசிஐ ஒரு திட்டம் போட்டுள்ளது தெரியவந்துள்ளது . அந்தத் திட்டத்திற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும் முழுமையாக மறுக்க முடியாது. அதாவது ஏதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது . ஆனால் அதற்கான வாய்ப்புகள் ஏற்படுவது மிக மிகக் குறைவு என்பதால் ரோஹித் சர்மாவை டி20 போட்டிக்கு தயாராக டிராவிட் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனையடுத்து நாளை நடைபெறும் இரண்டாவது டி20 பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மாவை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டிக்கு ரோஹித் சர்மா தயாராகி விடுவார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை