இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்க் வுட், ரெஹான் அஹ்மத் ஆகியோருக்கு பதிலாக ஒல்லி ராபின்சன் மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இத்தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோருக்கு இப்போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “இத்தொடரில் ஜானி பேர்ஸ்டோவ் நன்றாக பேட்டிங் செய்யாதது குறித்து கடுமையான கேள்விக்குறி இருக்க வேண்டு. ஏனெனில் அவர் ஒவ்வொரு முறையும் பந்தை சரியாக கணிக்க முடியாமலும், மோசமான ஷாட்டுகளையும் விளையாடியும் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் அவர்கள் யாரும் 40 ஓவருக்கு மேல் களத்தில் நீடிக்க தவறுகின்றனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இத்தொடரில் ஸாக் கிரௌலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த போட்டியில் பென் டக்கெட்டும் அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இத்தொடரில் சோபிக்க தவறியதே அந்த அணியின் பேட்டிங் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்திட்ட 11,500 ரன்களை எடுத்துள்ள போதும் அவர் இப்போட்டி தனது விக்கெட்டை இழந்து வருகிறார். அதிலும் அவர் தனது வழக்கமான டிஃபென்ஸை கைவிட்டு, ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி ஆட்டமிழப்பது தான் எனக்கு புரியவில்லை?.அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும், ஆனால் அவர் ஆட்டமிழக்கும் விதம் மிகவும் விரும்பத்தக்கதாக ஒன்றாக இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News