ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

Advertisement

அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் இந்திய அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

இதுதவிர்த்து, தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் சதமடித்து முத்திரைப் படைத்துள்ளார். இருப்பினும் எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடாததே காரணம் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. 

முன்னதாக கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய பயிற்சி முகாமில் சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை. மேலும் பயிற்சி முகாமில் தன்னால் பங்கேற்க முடியாது என்பதையும் சஞ்சு சாம்சன் கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் சஞ்சு சாம்சனின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த கேரள கிரிக்கெட் சங்கம் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்சமயம் கேரள கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவால் சஞ்சு சாம்சனின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கனவும் தகர்ந்துள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தற்போது இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள சஞ்சு சாம்சன், இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement

ஆனால் இதில் முதன்மை விக்கெட் கீப்பர் தேர்வாக ரிஷப் பந்த் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சோபிக்க தவறியுள்ளார். அதேசமயம் சஞ்சு சாம்சன் தொடர்ந்து தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் சஞ்சுவுக்கு பதில் ரிஷப் பந்த் தேர்வு செய்யபடுவது தேர்வாளர்களின் பாரபட்சத்தை வெளிப்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News