ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் ஆறுதல் வெற்றியையும் பதிவுசெய்தது. 

Advertisement

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி இலக்கை நோக்கி விளையாடும் போது களநடுவர் நோபால் தர மறுத்தது சர்ச்சையானது. இதனால் இலங்கை அணி அப்போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக கோபமடைந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா போட்டி முடிவுக்கு பின் கள நடுவர் லிண்டன் ஹனிபல்லை கடுமையாக விமர்சித்திருந்தார். 

Advertisement

இது ஐசிசி நெறிமுறை விதி 2.13 படி குற்றமாகும். அதாவது போட்டியின் போது வீரர்கள் அல்லது கள நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், போட்டி நடுவர் ஆகியோரை தரைகுறைவாக போசுவது அல்லது அவமதிப்பது குற்றமாகும். இதன் காரணமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபாரதம் விதிப்பதுடன், 3 கரும்புள்ளிகளையும் ஐசிசி அபாராதமாக விதித்தது. 

ஏற்கெனவே ஹசரங்கா இரண்டு கரும்புள்ளிகளை அபராதமாக பெற்றிருந்த நிலையில் இந்த மூன்று புள்ளிகளுடன் சேர்த்து மொத்தமாக 5 கரும்புள்ளிகள் அவருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கரும்புள்ளிகளை பெறும் பட்சத்தில் அவர் ஒரு டெஸ்ட் அல்லது, இரண்டு ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படுவார்.

அந்தவகையில் இலங்கை அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. தற்போது ஹசரங்கா 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், அவர் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் வநிந்து ஹசரங்காவால் பங்கேற்க முடியாது. 

அதேபோல், ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கும் ஐசிசி அபாராதம் விதித்துள்ளது. ஏனெனில் இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது நடுவரின் எச்சரியைக்கையும் மீறி நேரத்தை வீணக்கியதன் காரணமாக ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 சதவீதமும், மேலும் ஒரு கரும்புள்ளியையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News