18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் லிக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மாவும் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக அவர் தனது பந்துவீச்சில் கேகேஆர் அணியின் அபாயகரமான பேட்டர் ஆண்ட்ரே ரஸலின் விக்கெட்டை கைப்பற்றி, அந்த அணியின் ரன் வேகத்தைக் குறைத்தார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை சுயாஷ் சர்மா வீசிய நிலையில், அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டார். 

Advertisement

அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தை சுயஷ் சர்மா வைடராக வீசிய நிலையில் ஆண்ட்ரே ரஸல் பாய்ண்ட் திசையில் பவுண்டரி அடித்து மிராட்டினார். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த பந்தை சுயஷ் சர்மா கூக்ளியாக வீச அதனை கணிக்க தவறிய ரஸல் பந்த தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் அவர் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து  முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் சுனில் நரைன் - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் நரைன் 44 ரன்களிலும், ரஹானே 56 ரன்கலிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுள் இழபிற்கு இழந்து 174 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கல் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் தங்களில் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் சால்ட் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News