ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். ஆனால் மறுபக்கம் கேஎல் ராகுல் 13 ரன்னில் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களிலும் ஷுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து 29 பாந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

பின்னர் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டியும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனையடுத்து மருத்துவமனை சென்ற பும்ராவுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். ஒருவேளை பும்ராவின் காயம் உறுதியானால் அவர் மேற்கொண்டு இப்போட்டியில் பந்துவீசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “இந்தியா இன்னும் 40 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 185 ரன்களுக்கு மேல் இலக்காக நிர்ணயித்தால் நிச்சயம் வெற்றிபெற ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது, ஆனால் அது அனைத்தும் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியைப் பொறுத்தது.

ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் 145-150 போதுமானதாக இருக்கலாம். ஆனால் பும்ரா உடற்தகுதியுடன் இல்லை என்றால் சுமார் 200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தாலும் நிச்சயம் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது.  மேற்கொண்டு ஸ்கேன் செய்துவிட்டு அவர் திரும்பி வந்தபோது நல்ல நிலையில் காணப்பட்டார் மற்றும் அவரது உடல் மொழி ஆஸ்திரேலிய அணியைப் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை, இருப்பினும் அவர் குறித்த ரகசியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

Advertisement

ஏனெனில், பும்ரா பந்துவீச்சுக்கு வருவாரா இல்லையா என்பதை நீங்கள் ரகசியமாக அறிவிக்காமல் இருக்க வெனெடும். ஏனெனில் அவர் கிடைக்காவிட்டாலும் கூட, இந்த செய்தி எதிரணியின் டிரஸ்ஸிங் அறை முழுவதும் பரவுகிறது, ஏனெனில் இதுவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்கவில்லை. , தாங்கள் தாக்க வேண்டுமா, தற்காத்துக் கொள்ள வேண்டுமா அல்லது முன் காலில் விளையாட வேண்டுமா என்பது அவர்களுக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News