எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இ இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

Advertisement

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர்.தொடக்கத்தில் ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் பாபர் அசாம் , அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து முகமது ரிஸ்வான் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேறினார்.இதனால் பாகிஸ்தான் 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

பின்னர் ஷான் மசூத் - இஃப்திகர் அகமது இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். ஒரு புறம் ஷான் மசூத் நிதானமாக விளையாட ,மறுபுறம் இஃப்திகர் அகமது அதிரடி காட்டினார். அக்சர் படேலின் ஒரு ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட. இஃப்திகர் அகமது அரைசதம் கடந்தார்.பின்னர் முகமது ஷமி பந்துவீச்சில் அவர் 34 பந்துகளில் 51 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஷதாப் கான் ,ஹைதர் அலி ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் ஷான் மசூத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் 4 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தனர். 

Advertisement

ஏனெனில் கடந்த உலகக்கோப்பை தொடரிலும் இவர்கள் இவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதே தோல்விக்கான காரணமாக அமைந்திருந்தது. அதைபோலவே இந்த உலகக்கோப்பை தொடரிலும் இருவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

இதுமட்டுமின்றி அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்து இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News