ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐசிசியின் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் அதிலிருந்து எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

அந்தவகையில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது ஓமன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகளில் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியானது நாளை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கான் வாய்ப்பை உறுதிசெய்துவிடும். 

Advertisement

இந்நிலையில் முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அதன்பின் ஆஸ்திரேலிய அணி மருத்துவர்களுடன் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்றுள்ளார். 

இருப்பினும் அவர் நடைபெற்று முடிந்த இரண்டு லீக் போட்டிகளிலும் இதுவரை பந்துவீசாமல் இருப்பதுடன், பேட்டிங்கிலும் பெரிதளவில் சோபிக்காமல் இருந்து வருவது அவரது உடற்தகுதி குறித்தான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “மிட்செல் மார்ஷ் மீண்டும் போட்டிகளில் பந்துவீசத் தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர் நாளை நமீபியாவுக்கு எதிராக இதனை செய்வார் என்பது சந்தேகம் தான். ஆனாலும், ஸ்காட்லாந்திற்கு எதிரான எங்களுடைய கடைசி லீக் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக ஒவ்வொரு வீரரும் தங்களது முழு செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். 

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக எங்களின் அனுமானம் என்னவென்றால், நாங்கள் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற பின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து ஆலோசிப்பதுடன், அதற்கு வீரர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்.”என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News