‘இவனுங்க ஹார்ட் அட்டாக் கொடுக்கிறத நிறுத்த மாட்டனுங்கபா’ பிரீத்தி ஜிந்தாவின் கியூட்டான ட்வீட்!

Updated: Tue, Apr 13 2021 14:16 IST
they-wont-stop-giving-us-heart-attacks-preity-zinta-tweets (Image Source: Google)

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அதிலும் இப்போட்டியின் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தேஜாவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆட்டம் உணர்த்தியது. கடந்த ஐபிஎல் சீசனிலும் இதேபோன்று இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால், அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது.

அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் மும்பை அணியுடன் கடுமையாகப் போராடிய பஞ்சாப் அணி இரு சூப்பர் ஓவர்களைச் சந்தித்து வெற்றியைப் பெற்றது. இதுபோன்ற பல போட்டிகளை கடைசி நேரத்தில் போராடி பஞ்சாப் அணி வென்றுள்ளது.

தன்னுடைய அணியின் வெற்றியைப் பாராட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனக்கே உரிய ஸ்டைலில் புகழ்ந்துள்ளார். 

இதுகுறித்து பிரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பதிவில்,“ஆஹா, என்ன மாதிரியான ஆட்டம். புதிய ஜெர்ஸியில் எங்களுக்கு இது புதிய ஆட்டம். ஆனும் என்ஙள் அணி வீரர்கள் போட்டியைப் பார்க்கும் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார்கள். என்ன செய்வது? எங்களுக்கு இது சரியான போட்டியாக இல்லாவிட்டாலும், முடிவு எங்களுக்கானதாக இருந்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், தீபக் ஹூடா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை