இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்கலங்கி நின்றார்கள்.

Advertisement

குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 765 ரன்களை குவித்து ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் ஏமாற்றத்தை சந்தித்தார். முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

Advertisement

குறிப்பாக 90 ரன்களை எட்டியதும் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடாமல் தன்னுடைய சொந்த சாதனையை படைப்பதற்காக விராட் கோலி மெதுவாக சுயநலத்துடன் விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் போன்றவர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தம்முடைய கேரியரிலும் இது போன்ற விமர்சனங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி உடைப்பதற்கு வாழ்த்துவதாக தெரிவிக்கும் அவர், இதுகுறித்து பேசுகையில்,  “அப்படி சொல்பவர்கள் அனைவரும் அவர் மீது பொறாமை கொண்டவர்கள். விராட் கோலி அடித்த ரன்களை கண்டு அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இதை என்னுடைய கேரியரிலும் நான் சந்தித்துள்ளேன். சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் மட்டுமே நெருங்க முடியும். 

அனைத்து போட்டிகளிலும் அவர் மிகச் சிறப்பாக தயாராகி தன்னுடைய முழு செயல்பாடுகளை கொடுக்கிறார். அதனால் நீங்கள் எப்படி அவருடைய ரசிகராக இல்லாமல் போக முடியும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சச்சின் டெண்டுல்கர் போல அவர் 100 சதங்கள் அடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன். எசச்சின் னக்கு மிகவும் நெருக்கமான அன்பான நண்பர். அதே சமயம் ஏற்கனவே சொன்னது போல் நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News