அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!

Updated: Tue, Jan 03 2023 10:52 IST
Umran Malik gives reply to question on him breaking Shoaib Akhtar's record (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்ற அணி பாகிஸ்தான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றிருக்கிறது.

இவர்களில் அக்தர் அதிவேகமாக வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடியவர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகிய அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர்களை தனது வேகத்தின் மூலம் மிரட்டிய பந்துவீச்சாளர் அக்தர். கடந்த 2003ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிக் நைட்டுக்கு அக்தர் 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக பந்து.

அந்த சாதனையை இன்னும் எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்கவில்லை. இந்தியாவிலிருந்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்  வந்திருந்தாலும், அக்தர் மாதிரியான மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இருந்ததில்லை. உம்ரான் மாலிக் தான் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய இந்திய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் பவுலரான உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்திற்கு வீசுகிறார். இந்தியாவிலிருந்து 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசும் பவுலரை கண்டு கிரிக்கெட் உலகமே வியந்தது. அவரை டி20 உலக கோப்பையில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான வலைப்பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். அதே பந்தை போட்டியில் வீசியிருந்தார் அது வரலாற்று சாதனையாக இருந்திருக்கும். அந்தவகையில், அதேமாதிரியான பந்தை சர்வதேச போட்டியிலும் வீசி அக்தரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள உம்ரான் மாலிக்கிடம், அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உம்ரான் மாலிக், “இப்போதைக்கு இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருக்கிறது. நான் நன்றாக வீசி, அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், அக்தரின் சாதனையை முறியடிக்கலாம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. 

போட்டியில் பந்துவீசும்போது நாம் எவ்வளவு வேகத்தில் வீசுகிறோம் என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆட்டம் முடிந்தபின் தான் அதுகுறித்து நமக்கு தெரியவரும். களத்தில் பந்துவீசும்போது எனது முழுக்கவனமும் சரியான ஏரியாவில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை