ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரானது நவம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.இதனால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மறுபக்கம் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தொடரை இழந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி இம்முறை தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் அசாதாரண பந்துவீச்சை எதிர்கொள்ள ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும்,தொடர்ந்து எதிர்கொள்வதன் மூலம்  பந்துவீச்சை விளையாடுவது எளிதாக மாறுகிறது என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் பும்ராவை முதலில் எதிர்கொள்ளும் போது, ​அவருடைய பந்துவீச்சு முறையை கணிக்க சற்று சிரமப்படுவீர்கள்.

ஏனெனில் அது ஒரு வித்தியாசமான, வினோதமான பந்துவீச்சு முறையாகும். ஏனெனில் அவரது பந்தை ரிலிஸ் செய்யும் இடம் மற்ற பந்துவீச்சாளர்களை விட மிகவும் வித்தியாசமானது. எனவே அது வெளியே வருவது போல் உணர்வை தரும், பின்னர் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிக விரைவாக அது உங்களை சென்றடையும். அதனால் நீங்கள் அவரது பந்துவீச்சு முறைக்கு பழகிவிட்டால் போதும், உங்களால் அவரை எளிதாக எதிர்கொள்ள முடியும். 

நான் அவருக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன். அதற்காக அவரால என்னை முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. அதனை யாரலும் உறுதியாக சொல்லா முடியாது. ஆனால் முதல் முறையாக நீங்கள் அவரை எதிர்கொள்ளும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அதனால் அவரை முதல் முறையாக எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தாலும், நேரம் செல்ல செல்ல அது உங்களுக்கு சரியாகிவிடும். இருப்பினும் அவர் ஒரு கிளாஸ் பிளேயர் என்பதை மறந்துவிட கூடாது. 

எல்லோரும் தற்போது பும்ராவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களிடம் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகமது சிராஜ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். அவர் வலது கை மற்றும் இடது கை இரண்டுக்கும் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். முகமது ஷமி உடல் தகுதியுடன் இருக்கும் சமயத்தில் அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவரை மிகவும் குறைத்து மதிப்பிடுஇன்றனர். உண்மையில் அவரைப் பற்றி யாரும் அதிகள் பேசவில்லை.

Advertisement

மேலும் அவர்களிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களையும் தங்கள் பக்கம் வைத்துள்ளனர். அதுவே அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களை உண்மையில் பூர்த்தி செய்கிறது. என்னை பொறுத்தவரையில் நான் ஜஸ்பிரித் பும்ரா பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நீங்கள் எங்கே நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்க விரும்புகிறீர்கள், அவர் என்னை எங்கே வெளியேற்றுகிறார் என்று நான் யோசிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News