இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணியில் தொடக்க வீரர் அர்ஷ் ரங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹிமான்ஷு ரானா மற்றும் கேப்டன் அங்கித் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கித் குமார் 48 ரன்களிலும், ஹிமான்ஷு ரானா 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சிந்து 10 ரன்களுக்கும், பார்த் வட்ஸ் 8 ரன்களுக்கும், தினேஷ் பானா 20 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 22 ரன்னிலும், சுமித் குமார் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அனுஜ் 23 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் அபிலேஷ் ஷெட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழகக், அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவியும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்மாறன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியது 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிருஷ்ண் ஸ்ரீஜித் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ஸ்மாறன் ரவிச்சந்திரனும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் ஸ்ரேயாஸ் கோபால் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கர்நாடகா அணி 47.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி முதல் அணியாக முன்னேறி கர்நாடகா அணி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News