மீண்டும் தந்தையாகும் விராட் கோலி; ரகசியத்தை வெளியிட்ட ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Sat, Feb 03 2024 19:52 IST
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி; ரகசியத்தை வெளியிட்ட ஏபிடி வில்லியர்ஸ்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினார். 

இருப்பினும் அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரிவிக்கப்படவில்லை. அதன்பின் விராட் கோலியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகினார். ஆனால் விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி அதனை முற்றிலுமாக மாறுத்ததுடன், “எங்கள் அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது போன்ற செய்திகளை சரியான தகவல் இல்லாமல் பரப்ப வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்”என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "விராட் கோலி நன்றாக இருக்கிறார். விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர். இதனால் தான் தனது குடுமபத்துடன் விராட் கோலி நேரத்தை செலவிட்டு வருகிறார். பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம் என்று நான் நினைக்கிறேன். அதனால், விராட் கோலியை தவறாக மதிப்பிட கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை மணந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழைந்தை (வாமிகா) பிறந்தது. மேலும் தனது முதல் குழந்தை பிறப்பின் போதும் அவர் டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை