புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இர்னடாவது எஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் இந்திய அணி நேற்றையை தினம் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்த கையோடு முதல் நாள் ஆட்டத்தை முடித்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடர்ந்தனர். இதில் இருவரும் தலா 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 18 ரன்னிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 107 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த நிலையில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அந்த வகையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் மீது இப்போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் மிட்செல் சாண்ட்னர் வீசிய புல்டாஸ் பந்தை சரியாக கணிக்க தவறி க்ளீன் போல்டாகினார். அதிலும் எளிதாக விளையாட கூடிய பந்தில் எப்படி அவுட் ஆனோம் என்பதை நம்பமுடியாமல் விராட் கோலியும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.