இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் கோலியும் இணைந்து 131 ரன்களை குவித்தனர். சதமடித்த கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

Advertisement

அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை விளாசி சாதனை படைத்தார் கோலி. இந்த தொடரில் 2ஆவது சதத்தை அடித்து கோலி அசத்தினார். அதைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கோலி 150 ரன்களைக் கடக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 390 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி பேட்டிங்கின்போது சாமிகா கருணரத்னே வீசிய 42ஆவது ஓவரின் 5ஆவது பந்தை கோலி பவுண்டரியை நோக்கி அடிக்க, அதை தடுக்க இலங்கை வீரர்கள் வாண்டர்சே மற்றும் பண்டாரா ஆகிய இருவரும் முயற்சித்தனர். இருவரும் எதிரெதிர் திசையில் இருந்து பந்தை பிடிக்க ஓடிவந்தபோது மோதிக்கொண்டனர். பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது. ஆனால் வாண்டர்சே - பண்டாரா மோதியதில் பண்டாராவிற்கு முழங்காலில் கடும் காயம் ஏற்பட்டது. 

 

அவரால் எழக்கூட முடியாமல் மைதானத்திலேயே படுத்துவிட்டார். வாண்டர்சே கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுந்து நின்றார். ஆனால் பண்டாராவால் எழவே முடியாததால் ஸ்ட்ரெட்ச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். பண்டாரா இலங்கை அணியின் முக்கியமான பேட்ஸ்மேன். அவருக்கு காயம் ஏற்பட்டது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News