பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

இதையடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைக்க முடியும். உண்மையில், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்கள்

இந்திய அணியின் அனுபவ வீரர் விராட் கோலி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இதுவரை 17 போட்டிகளில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 82.88 சராசரியுடன் 746 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் விராட் கோலி 46 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் அவர் விளையாடிய 4 போட்டிகளில் 72.33 என்ற சராசரியில் 217 ரன்காளைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதமும் அடங்கும். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News