ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

Advertisement

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்தனர். 

Advertisement

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து மந்தனா ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. 

இந்நிலையில் போட்டி முடிவுக்குபின் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “ரிச்சா கோஷ் ரன்களை எடுக்காதபோதும் நான் எப்போதும் அவளுக்கு ஆதரவாக இருந்தேன். அவளுடைய ஆரம்ப நாட்களில், அவள் கொஞ்சம் கஷ்டப்பட்டாள், ஆனால் நான் எப்போதும் அவளுக்கு ஆதரவாக இருந்தேன். அவர் ரன்களை எடுக்காத போதெல்லாம் அவருக்கு ஆதரவளித்த எங்கள் பணியாளர்களுக்கும் தேர்வாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த போட்டியில், அவர் தனது பவர்-ஹிட்டிங்கை வெளிப்படுத்தினார், இதை நாங்கள் உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் பார்த்தோம்.

Advertisement

அதேபோல் இன்று  எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை. ஆட்டத்தில் இருந்து நாம் மேம்படுத்த வேண்டியது பீல்டிங் மட்டுமே. அதில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். மேலும் இது ஒரு சிறப்பான ஆட்டமாக இருந்தது. என்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டாக இருந்தது, என்ன பயமில்லாத கிரிக்கெட்டின் காட்சிப்பொருள் இங்கே இந்தியாவில் முடிந்து விட்டது மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பார்ப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News