16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது. 

Advertisement

இதையடுத்து இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. மழையால் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்திய ஷுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்தார்.

Advertisement

இருப்பினும் மறுபுறம் பெயருக்காக 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட சஹா 3 பவுண்டரியுடன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த கில் தொடர்ந்து மும்பை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு முதல் ஆளாக அரை சதமடித்து வலுவான அடித்தளத்தை அமைத்தார். குறிப்பாக சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த சீசனிலும் ஏற்கனவே அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ளார்.

அந்த வகையில் இந்த போட்டியில் உச்சகட்ட ஃபார்மைத் தொட்டு மும்பை பவுலர்களை எப்படி போட்டாலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் வெளுத்து வாங்கிய அவர் சதத்தை நெருங்கினார். குறிப்பாக ஆகாஷ் மாத்வால் வீசிய 12ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு ரவி சாஸ்திரி, இயன் பிசப் போன்ற வர்ணனையாளர்களை ஆச்சரியப்படுத்திய அவர், ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். மறுபுறம் சாய் சுதர்சன் தொடர்ந்து மெதுவாக பேட்டிங் செய்து கம்பெனி கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஆகாஷ் மாத்வால் உள்ளிட்ட அனைத்து மும்பை பவுலர்களுக்கும் கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய ஷுப்மன் கில் வெறும் 49 பந்துகளில் இந்த சீசனில் 3வது சதமடித்தார்.

அதே வேகத்தில் தொடர்ந்து மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் 129 (60) ரன்கள் விளாசி ஒரு வழியாக கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். குறிப்பாக கேமரூன் கிரீன் வீசிய 15வது ஓவரின் 5வது பந்தில் இறங்கியவரே நடந்து சென்ற அவர் ஹூக் ஷாட் வாயிலாக 81 மீட்டர் சிக்ஸரை அடித்ததை பார்த்து எதிரணியின் கேப்டனான ரோகித் சர்மாவே வாய் மீது கை வைத்து வியந்து போனார். மேலும் தங்களது அணியை பந்தாடிய அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதால் சதமடித்த போது ரோஹித் சர்மா கை கொடுத்து சிரித்த முகத்துடன் பாராட்டவும் செய்தார்.

 

Advertisement

அப்படி ரசிகர்களை மகிழ்வித்து அனைவரது பாராட்டு மழையில் நனைந்து சென்ற அவருக்குப் பின் மறுபுறம் மெதுவாக விளையாடிய சாய் சுதர்ஷன் 43 ரன்கள் எடுத்து அணி நலனுக்காக கடைசி ஓவரில் ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார். இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 ரன்களும் ரசித் கான் 5 ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்து மிரட்டியது. இந்நிலையில் ஷுப்மன் கில் சிக்சர் அடிப்பதை ரோஹித் சர்மா வியந்து பார்க்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News