வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி புள்ளி பட்டியலிலுல் முதலிடம் பிடித்துள்ளது. 

Advertisement

இருப்பினும் 2023 உலக கோப்பைக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மிகவும் பலவீனமான அணியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்குவதில் என்ன வீரம் என்று இந்த வெற்றியைப் பற்றி இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலை பாராட்டும் ரசிகர்கள் சதமடித்து 103 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை அப்படியே நேர் மாறாக கிண்டலடித்து வருகிறார்கள். 

Advertisement

ஏனெனில் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார் என்பதற்காக கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார்.

ஆனாலும் அழுத்தமான 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை பதிவு செய்த இந்திய அணி, அவரது தலைமையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் டி20 கிரிக்கெட்டில் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித்துக்கு பதில் புதிய கேப்டனை நியமித்து இளம் அணியை உருவாக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகின்றனர். 

முன்னதாக சுமாரான கேப்டன்ஷிப் காரணமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் டாஸ் வென்று முதலில் ஏன் பேட்டிங் செய்யவில்லை அஸ்வினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பது போன்ற கேள்விகளை ரோகித் சர்மாவிடம் கேட்காமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக நியமித்த தேர்வுக்குழுவை முன்னாள் வீரர் சுனில் காவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தங்களது காலங்களில் கபில் தேவ் உட்பட யாராக இருந்தாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் போது அதற்கான கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் மீண்டும் விமர்சித்துள்ளார். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலைமை தலைகீழாக மாறி ஒரு முறை கேப்டனாக அறிவிக்கப்பட்டால் பதவி விலகும் வரை அவரிடம் எவ்விதமான கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்று கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வெற்றி பெற்றாலும் தோல்வியை சந்தித்தாலும் நாம் அந்த பதவியில் இருப்போம் என்பதை கேப்டன்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். சொல்லப்போனால் இந்த நிலைமை இப்போது மட்டுமல்ல நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக 2011இல் 0 – 4, 0 – 4 என்ற கணக்கில் அடுத்தடுத்த தொடர்களில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் கேப்டன் மாற்றப்படவில்லை” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News