WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பசக நடைபெற்று வருகிறத்.. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரேனுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கேப்டன் மெக் லெனிங்குடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் மெக் லெனிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அனபெல் சதர்லேண்ட் - மரிஸான் கேப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் 19 ரன்களில் அனபெல் சதர்லேண்ட் ஆட்டமிழக்க, 12 ரன்களுடன் மரிஸான் கேப்பும் தனது விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெஸ் ஜோனசெனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் சாரா பிரைஸ் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் ஷிகா பாண்டே 14 ரன்களிலும், ராதா யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இறுதியில் 4 ரன்கள் எடுத்திருந்த அருந்ததி ரெட்டியும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேனுகா சிங், ஜார்ஜியா வர்ஹேம் 3 விக்கெட்டுகளையும், கிம் கார்த், எக்தா பிஸ்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 142 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது.