இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இத்தொடர் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.

Advertisement

ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது மிகவும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் சில வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதேசம் தொடர்ந்து சொதப்பிவரும், அணியில் இருந்த நீக்கப்பட்ட மற்றும் நீண்ட் நாள்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த வீரர்கள் என ஒரு சிலருக்காக சிறப்பாக செயல்பட்ட விரர்களை அணியில் இருந்து நீக்கிய எந்தவகையில் நியாயம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

Advertisement

அதிலும் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இத்தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணி என எதிலும் இடம்பிடிக்காததும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அத்போல் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சஞ்சு சாம்சனிற்கும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோர்வுகுழுவை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் மிகக்கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரிலும் என அனைத்து ஃபார்மெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை. அதேபோல் சிறப்பாக செயல்பட தவறி வருவரும் ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதூடன், அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர். ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற வீரர்களை கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வித்தியாசமாக உடலில் பச்சைக் குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழையும், பெருமையையும் பேசுவதற்காக தனிப்பட்ட ஏஜென்சியை வைத்திருந்தால் உங்களுக்கு இந்திய அணில் வாய்ப்பு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News