இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து வதந்திகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன. இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, அவர்களது திருமணத்தில் பிரச்சனை இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கின. யுஸ்வேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ வர்மாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியபோது இந்த ஊகம் மேலும் வலுத்தது.

Advertisement

அவர்கள் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அவர்கள் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் பிரிவது உறுதியாகத் தெரிகிறது என்றும் கூறுகின்றன. இருப்பினும், இதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சம்பவத்தின் உண்மை குறித்து சாஹலும் தனஸ்ரீயும் மௌனம் கலைப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் அவர்கள் இருவரிடமிருந்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Advertisement

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தனஸ்ரீ வர்மா தனது சமூக வலைதளபதிவில் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர், "கடந்த சில நாட்கள் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தன. இதில் மிகவும் தொந்தரவாக இருப்பது என்னவென்றால், உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. 

எனது பெயரையும் நேர்மையையும் கட்டியெழுப்ப நான் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளேன். எனது மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல, வலிமையின் அடையாளம். எதிர்மறை எண்ணங்கள் ஆன்லைனில் எளிதில் பரவினாலும், மற்றவர்களை உயர்த்த தைரியமும் இரக்கமும் தேவை. எனது உண்மையின் மீது கவனம் செலுத்தி, எனது மதிப்புகளைப் பேணுகையில் முன்னேறிச் செல்ல நான் தேர்ந்தெடுத்துள்ளேன். ஓம் நமசிவாய" என பதிவிட்டுள்ளார்.

யுவேந்திர சாஹல் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார். இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் காணொளிகள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News