
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 45 ஆவது சர்வதேச ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் விளாச காத்திருந்த விராட் கோலி, தற்போது தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசி அசத்திருக்கிறார்.
விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஒவர் முடிவில் 373 ரன்கள் என்ற இலக்கை எட்டி உள்ளனர். இந்த நிலையில் தனது வெற்றியின் ரகசியம் குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கோலி, “இலங்கைத் தொடருக்கு முன்பாக எனக்கு நல்ல ஓய்வு கிடைத்தது. அதன் பிறகு இரண்டு பயிற்சி முகாமில் பங்கேற்று இந்த போட்டிக்காக தயாராகினேன். வங்கதேச தொடர் முடிந்தவுடன் மனதளவிலும் உடல் அளவிலும் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருந்தேன்.