
பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, அஃப்ரீடி போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுடன் களமிறங்கியது.
இந்நிலையில், பாகிஸ்தான் இளம் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசி அசத்தியது. இதனால், மொத்தம் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதிகபட்சமாக இமாத் வாசிம் 18 (32), தஹிர் 16 (9), கேப்டன் சதாப் கான் 12 (18) ஆகியோர்தான் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 92/9 ரன்களை மட்டும்தான் எடுத்தது.