-mdl.jpg)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொஹாலியின் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் கேஎல் ராகுல் 55, சூர்யகுமார் யாதவ் 46, ஹார்திக் பாண்டியா 71 ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்களை குவித்தது.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அப்போது பவர் பிளேவில் ஓபனர் கேமரூன் கிரீனின் எல்பிடபிள்யு-வுக்கு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அப்பீல் செய்யவில்லை. இதனால், மறுவாழ்வு பெற்ற கிரீன் தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார். அப்போது அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் இவருக்கு கேட்சை விட்டனர்.