
2 tests were done, out of which 1 was negative and other positive: Saha (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பயோ பபுளில் இருந்த இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் தொற்று உறுதியான நிலையில் சஹா, மருத்துவ ஆலோசனையின் படி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இரண்டு வார தனிமை படுத்தலுக்கு பிறகு, அவருக்கு மீண்டும் இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் ஒன்றில் தொற்று இல்லை என்று, மற்றொன்றில் தொற்று உள்ளது என்று வந்துள்ளது.