Advertisement

2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களில் ஆல் அவுட்டானது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2024 • 17:20 PM
2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா!
2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாது அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 209 ரன்களைச் சேர்த்தார். இதில் 19 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும்.

இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பாந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் - ஸாக் கிரௌலி இணை வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களிலேயே அந்த அணி 59 ரன்களைச் சேர்த்தது. 

Trending


அதன்பின் 21 ரன்களில் பென் டக்கெட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் விளாசிய ஸாக் கிரௌலி 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 23 ரன்களுக்கும், ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 6 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் 171 ரன்கள் முன்னிலயுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement