Advertisement

BAN vs IND, 2nd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; ஷுப்மன், புஜாராவையும் இழந்து இந்தியா!

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 23, 2022 • 11:18 AM
2nd Test, Day 2: Three wickets in the morning session for Bangladesh!
2nd Test, Day 2: Three wickets in the morning session for Bangladesh! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் நேற்று தாக்காவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இருந்தும் அந்த அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. மொமினுல் ஹக், சிறப்பாக பேட் செய்து 157 பந்துகளை எதிர்கொண்ட அவர் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி இருந்தார். 

Trending


அதன்பின் லிட்டன் தாஸ், ரஹீம் போன்ற வீரர்கள் கொஞ்ச நேரம் களத்தில் விளையாடி இருந்தனர். ஆனாலும் அவர்களால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். உனத்கட், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிராஜ் மற்றும் அக்சர் படேல் முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை.

தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது. முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்ற போது 8 ஓவர்கள் பேட் செய்து 19 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 10 ரன்களிலும், ஷுப்மன் கில் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா - விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனார். ஆனால் இந்த ஜோடியாலும் நீண்டநேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. இதில் 24 ரன்களைச் சேர்த்திருந்த சட்டேஷ்வர் புஜாரா, தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து விராட் கோலியுடன் இணைந்து ரிஷப் பந்த் விளையாடிவருகிறார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் விராட் கோலி 18 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement