
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் ஆட்டமிழக்க இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், “இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி. இந்த போட்டியில் நாங்கள் ஒரு நல்ல பாசிட்டிவ்வான எண்ணத்துடன் தான் களமிறங்கினோம். ஆனாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர்.