
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெவ்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் சதத்தை சிக்சருடன் பவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதத்தை பவுண்டரி அடித்து பதிவுசெய்து அசத்தினார். இவரைத் தவிற மற்ற எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்காமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இந்நிலையிலி இப்போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தியதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்பின் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசி மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.