Vinod kambli
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெவ்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் சதத்தை சிக்சருடன் பவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதத்தை பவுண்டரி அடித்து பதிவுசெய்து அசத்தினார். இவரைத் தவிற மற்ற எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்காமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.