
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ளதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்க்ரம் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.