Advertisement
Advertisement
Advertisement

தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்!

ரிஷப் பந்த் தோள் மீது இருக்கும் கை தம்முடையது தான் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள மயங் அகர்வால் கடந்த 4 வருடங்களாக பல்வேறு கோணத்தில் பேசிய ரசிகர்களின் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan September 29, 2023 • 12:31 PM
தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்!
தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்! (Image Source: Google)
Advertisement

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையின் போது எம்எஸ் தோனி மற்றும் சில இந்திய வீரர்கள் அடங்கிய பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது 2019 உலகக் கோப்பையின் போது லண்டன் நகரில் வலம் வந்த இந்திய வீரர்கள் அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்கள்.

Trending


குறிப்பாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பின்புறத்தில் பும்ரா தோளில் கை வைத்துக்கொண்டு நிற்கும் நிலையில் அவர்களுக்கு பின்புறத்தில் மயங் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இருக்கும் செல்ஃபியை ஹர்திக் பாண்டியா புகைப்படமாக எடுத்து 2019இல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தில் ரிஷப் பந்த் தோள் மீது ஒற்றை கையை வைத்துள்ளது யார் என்பதே ரசிகர்களுக்கு குழப்பமானதாக இருந்து வந்தது.

சொல்லப்போனால் கடந்த 2019 முதலே அவ்வப்போது இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பந்த் தோளில் கை வைத்திருப்பது யார்? என்று ரசிகர்கள் பேசுவதை வழக்கமாக வைத்து வந்தனர். அதற்கு “அது மயங் அகர்வால் கை தானே இதில் என்ன சந்தேகம்” என்று நிறைய ரசிகர்கள் பதிலளித்தனர். ஆனால் அவருக்கும் பந்துக்கும் இடையேயான தூரம் சற்று அதிகமாக இருப்பதால் அவ்வளவு தூரத்தை ஈடுகட்டும் அளவுக்கு மயங் அகர்வால் கை பெரியதா? என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் பதிலளித்தனர்.

மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் குழம்புவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று பலரும் தெரிவித்தார்கள். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் பந்த் தோள் மீது இருக்கும் கை தம்முடையது தான் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள மயங் அகர்வால் கடந்த 4 வருடங்களாக பல்வேறு கோணத்தில் பேசிய ரசிகர்களின் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளார். 

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “பல ஆண்டுகளாக இது பற்றிய விரிவான ஆராய்ச்சி, விவாதங்கள் மற்றும் எண்ணற்ற சதி கோட்பாடுகளுக்கு பின் நாட்டிற்கு இறுதியாக இதை தெரியப்படுத்துங்கள். ரிஷப் பந்த் தோளில் என்னுடைய கைகள் தான் இருக்கிறது. பின்குறிப்பு இதைப் பற்றிய ஏதேனும் எஞ்சிய அனைத்து உரிமை கோரல்களும் தவறானது மற்றும் உண்மையல்ல” என்று கலகலப்பாக பதிவிட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement